அமைதியும் புரிந்துணர்வும் கூடிய நல்வாழ்வு அமையட்டும் தமிழ் வருடங்களில் 38-வது வருடமான சுப மங்களகர குரோதி என்னும் நாமத்துடன் பிறந்திருக்கும் தமிழ் புத்தாண்டானது சிறப்பான ஒரு வருடமாக அனைவருக்கும் அமைய வேண்டும். உலக மக்கள் அனைவரும் கடந்த தசாப்த காலமாக பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளோம். அனைத்து சமயங்களும் வாழ்வியலை வழிகாட்டி சுட்டி நிற்கின்ற அதே வேளையில் எமது சமயமானது அன்பு, கருணை, கொல்லாமை , பிறருக்கு தீங்கு செய்யாமை, புரிந்துணர்வு போன்ற நற்செயல்களை சுட்டி நிற்கிறது. இவை போன்ற விடயங்கள் தொலைத்துவிட்டோம் என்கின்ற காலப்பகுதியிலே நாம் அனைவரும் இருக்கிறோம் . நாம் எமது குடும்ப உறவுகளிடம் அன்பு செலுத்துவது போல் ஏனைய இனத்தார், சமூகத்தினர், சமயத்தாருடன் அன்பு செலுத்துதல் வேண்டும்.
மேலும் ஒவ்வொருவருடைய தனித்துவ பண்பாட்டினை மதித்துப் போற்ற வேண்டியது சிறப்பானதும் பிரதானமான ஒன்றாக காணப்படுகிறது. நாம் தமிழ், சிங்கள புத்தாண்டை மகிழ்வாய் கொண்டாடினோம். அதனைப்போல ஒவ்வொரு கணமும் அமைய வேண்டும். ஒவ்வொரு விடயத்திலும் அமைய வேண்டும். மகிழ்ச்சியும் அதிகரிக்க வேண்டும் புது வருடத்தில் நாம் அனைவரும் இறை பிரார்த்தனையுடன் கூடிய இன்பகரமான வாழ்வு வாழ வேண்டும் என பரம்பொருளை வேண்டி இறை பிரார்த்தனை செய்கிறோம். இச்சமயத்திலே இந்து குருமார் அமைப்பின் சார்பில் வழிகாட்டுதலையும் நிறைந்த இறை பிரார்த்தனையும் நல்லாசிகளையும் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறோம்.அமைதியும் புரிந்துணர்வும் கூடிய நல்வாழ்வு அமையட்டும்
கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.