Monday, May 6, 2024
Home » ஆலயத்தில் ரூ.16 இலட்சத்திற்கு ஏலம் போன புடவை

ஆலயத்தில் ரூ.16 இலட்சத்திற்கு ஏலம் போன புடவை

- கடவுள் சிலைக்கு காணிக்கையாக சமர்ப்பிப்பு

by Prashahini
April 24, 2024 4:19 pm 0 comment

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தமாங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள கண்ணகி அம்மனை வழிபடும் பொருட்டு புடவை ஒன்று ரூ.16 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

கோவிலுக்கு பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்த இருந்த இந்த சேலை, 16 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கப்பட்டு, கடவுள் சிலைக்கு காணிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.

பெருமளவு உள்ளூர் மற்றும் புலம்பெயர் பக்தர்கள் பங்கேற்புடன் நேற்று முன் தினம் (22) புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இடம்பெற்றது.

அந்தவகையில் கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. அதில் சேலை ஒன்றுக்கு ரூ.16 இலட்சம் ரூபாயை கொடுத்து பக்தர் ஒருவர் வாங்கிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT