Monday, May 6, 2024
Home » அமெரிக்க பல்கலைகளில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிப்பு
காசா போருக்கு எதிராக:

அமெரிக்க பல்கலைகளில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிப்பு

by Gayan Abeykoon
April 24, 2024 3:36 pm 0 comment

காசா போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவின் கொலம்பியா மற்றும் யாலே பல்கலைக்கழகத்தில் இருந்து ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு நிர்வாகங்கள் போராடி வருகின்றன.

நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்த பொலிஸார் பலரை கைது செய்தனர். முன்னதாக யாலே பல்கலைக்கழகத்திலும் பல மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கொலம்பியாவில் வகுப்புகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதனையொத்த ஆர்ப்பாட்ட முகாம்கள் பார்க்லி எம்.ஐ.டீ. மற்றும் நாடெங்கும் உள்ள ஏனைய கல்லூரிகளிலும் பரவியுள்ளன.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசா போர் வெடித்தது தொடக்கம் அந்தப் போர் மற்றும் கருத்துச் சுதந்திரம் பற்றி அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கடும் விவாதங்களில் நீடித்து வருகின்றன. இதில் பல்கலைக்கழகங்களில் முகாம்கள் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் போர் தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT