கொள்கைநிலை இயற்பியலாளரும் தத்துவவாதியுமான பேராசிரியர் நளின் டி சில்வா காலமானார் என்ற செய்தியால் நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் நளின் டி சில்வா, இடதுசாரி, இலங்கை சமசமாஜக் கட்சி மற்றும் புதிய சமசமாஜக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.
ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் என்ற ரீதியில் அவர் இரண்டு இடதுசாரி சட்டங்களையும் கற்று மேற்கத்திய அறிவியலின் அடித்தளம் தொடர்பில் தீவிரமாக கேள்வி கேட்க தூண்டப்பட்ட ஒரு பாத்திரமாக திகழ்ந்தார்.
அவர் மேலும் அறிவுச் சார்ந்த விடயங்களை ஆய்வு செய்து சத்பவ விக்ரம் கல்வியிலும் ஈடுபட்டார். மனதுடன் தொடர்புடைய அறிவைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாக சிந்தனையின் கருத்தை மனிதன் அறிமுகப்படுத்தி மேம்படுத்துவதிலும்ஆர்வமாக செயற்பட்டவரென்றும் தெரிவித்துள்ளார். அன்னாரில் இழப்பினால் துயருறும் அவரது மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர் உள்ளிட்டஅன்னாரது மாணவ சமூகத்துக்கும் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.