Saturday, May 18, 2024
Home » ஆட்பதிவு திணைக்களம் இன்று 01 மணிவரை திறந்திருக்கும்
GCE O/L பரீட்சார்த்திகளுக்காக

ஆட்பதிவு திணைக்களம் இன்று 01 மணிவரை திறந்திருக்கும்

by mahesh
May 4, 2024 7:00 am 0 comment

க.பொ.த. சாதாரணதர பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் விடுமுறை தினமான இன்று (04) திறந்திருக்குமென அத்திணைக்களம் அறிவித்துள்ளது. சாதாரணதர பரீட்சைக்காக இதுவரை தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள், கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்டு முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக கொண்டு வர வேண்டுமெனவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்தது. ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா , மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள மாகாண அலுவலகங்கள் இன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை திறந்திருக்கும். உரிய தகவல்களை உறுதிப்படுத்துவதற்கான கடிதத்தை www.drp.gov.lk என்ற ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாமெனவும் ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT