வவுனியா, கற்பகபுரம் பிரதேசத்தில் 376 குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை இலவசமாக பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மேற்படி குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் நேற்று செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொடுத்தார். வவுனியாவின் கற்பகபுரம் பிரதேசத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்ததுடன், இது தொடர்பாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு மக்கள் கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து 376 குடும்பங்கள் பயனடையும் வகையில் இராஜாங்க அமைச்சரால் இந்த நன்மை கிடைத்துள்ளது.
இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வடமாகாண தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையின் சிரேஷ்ட சமூகவியலாளர் கோபிநாத், கற்பகபுரம் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வவுனியா விசேட நிருபர்