இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது முகவர் மற்றும் பாங்கசூரன்ஸ் பிரிவுகளைச் சேர்ந்த மிகச் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தியிருந்தவர்களுக்கு பிரத்தியேகமான வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பை வெகுமதியாக வழங்கி கௌரவித்துள்ளது. இந்த சுற்றுலா வாய்ப்புகளினூடாக, தனது அணி அங்கத்தவர்களின் சாதனைகளை கௌரவித்து, கொண்டாடும் வகையில் உலகத் தரம் வாய்ந்த வெகுமதிகளை வழங்குவதில் யூனியன் அஷ்யூரன்ஸ் காண்பிக்கும் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கான சுற்றுலா வாய்ப்பு முகவர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், பாங்கசூரன்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மலேசியா, வியட்நாம் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
125 க்கும் அதிகமான பங்குபற்றுநர்களுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றுப் பயணங்கள் தேடல்கள் மற்றும் கலாசார இனங்காணல்கள் நிறைந்த அனுபவங்களைக் கொண்டிருந்தன. முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்பு பங்குபற்றுநர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், குறித்த நாடுகளில் காணப்படும் கலாசாரங்களை அனுபவிப்பதற்கும், சக ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளின் பயனையும் பெற்றிருந்தனர்.