தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரது மகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன் வைத்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சரின் மகளான சமித்ரி ரம்புக்வெல்லவே இவ்வாறு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சரின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக அவர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தமது தந்தையாரின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதால் அது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அவருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேற்படி முறைப்பாடு மூலம் மனித உரிமை ஆணைக்குழுவை கேட்டுக் கொண்டுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்