தெற்கு காசாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்ட தாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது.
சப்ரீன் அல் சகானி என்ற அந்த பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ரபா மருத்துமனை ஒன்றில் அறுவைச் சிகிச்சை மூலம் மீட்கப்பட்டது. கடும் போராட்டத்திற்கு பின்னரே மருத்துவர்களால் அந்த குழந்தை உயிருடன் காப்பற்றப்பட்டது.
எனினும் அந்தக் குழந்தை கடந்த வியாழக்கிழமை (25) உயிரிழந்த நிலையில் தாய்க்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ரபா நகரில் கடந்த வாரம் நடத்தப்பட்ட வான் தாக்குதில் கொல்லப்பட்ட 16 குழந்தைகளில் சப்ரீனும் இடம்பெற்றுள்ளது. குடியிருப்பு வளாகம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே அனைவரும் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலின்போது சப்ரீனின் தாய் ஏழரை மாத கர்ப்பிணியாக இருந்தார். இதன்போது அவரது கணவர் மற்றும் மூன்று வயது மகள் மலக்கும் கொல்லப்பட்டனர்.