142
உள்ளூராட்சிமன்றங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றதுடன், இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனைக் கூறினார்.
இந்நிலையில் உள்ளூராட்சி நிறுவனங்களிலுள்ள 8,400 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானித்துள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.