பாஸ்மதி அரிசிக்கு பதிலாக இரண்டு மாற்று நெல் வகைகளை அறிமுகப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வெற்றியடைந்துள் ளதாக, பதலகொட நெல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி பயிர் சிபாரிசு குழுவின் பரிந்துரைகளின் கீழ், இந்த பாசுமதி மாற்று நெல் ரகங்களை நாட்டில் உற்பத்தி செய்வதற்காக இன்னும் சில மாதங்களில் விடுவிக்க முடியுமென நெல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்த அரிசி தேவையும் நாட்டின் உற்பத்தியிலிருந்து பெறப்பட்ட போதிலும், சுற்றுலாத் துறை மற்றும் ஹோட்டல்களுக்குத் தேவையான பாசுமதி இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பாசுமதி அரிசிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் வகையில், நாட்டில் பாசுமதி அரிசிக்கான உற்பத்தி நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த வகை அரிசியும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.