Monday, May 20, 2024
Home » யாழ். வேலணையில் மிதிவெடிகள் மீட்பு

யாழ். வேலணையில் மிதிவெடிகள் மீட்பு

by Gayan Abeykoon
May 9, 2024 4:18 am 0 comment

யாழ். வேலணை, சரவணை மேற்கு பிரதேசத்தில் ஐந்து மிதிவெடிகள் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் மீட்கப்பட்டன.

மேற்படி பிரதேசத்திலுள்ள காணியொன்றிலிருந்தே மிதிவெடிகள் மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அக்காணிக்குச் சென்று மிதிவெடிகளை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினருக்கு பொலிஸார் அறிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த மிதிவெடிகள், நீதிமன்ற அனுமதியுடன் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT