58
யாழ். வேலணை, சரவணை மேற்கு பிரதேசத்தில் ஐந்து மிதிவெடிகள் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் மீட்கப்பட்டன.
மேற்படி பிரதேசத்திலுள்ள காணியொன்றிலிருந்தே மிதிவெடிகள் மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அக்காணிக்குச் சென்று மிதிவெடிகளை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினருக்கு பொலிஸார் அறிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த மிதிவெடிகள், நீதிமன்ற அனுமதியுடன் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். விசேட நிருபர்