ருஹுனு பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான “சகோதரத்துவப் போர்” கிரிக்கெட் போட்டி இன்று (29) முதல் 31ஆம் திகதி வரை ருஹுனு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
சகோதரத்துவப் போர் என்பது ஒரு கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல, இலங்கையின் வடக்கு மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான ஒற்றுமை, நட்பு மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகும். ருஹுனு பல்கலைக்கழக சமூக நல்லிணக்க நிலையத்தினால் (SRC) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டியானது பல்கலைக்கழக சமூகங்களுக்கிடையில் சிறந்த உறவுகளையும் ஒத்துழைப்பையும் அபிவிருத்தி செய்வதையும் சமூக நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதையும் நோக்காகக் கொண்டுள்ளது.