Thursday, May 9, 2024
Home » இலங்கை அபிவிருத்தி குழாத்தினர் அறிவிப்பு

இலங்கை அபிவிருத்தி குழாத்தினர் அறிவிப்பு

by gayan
April 27, 2024 6:45 am 0 comment

உகண்டா அணிக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அபிவிருத்தி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கிண்ணத்தில் ஆடவுள்ள உகண்டா அணி அதற்காக பயிற்சி பெறும் நோக்கில் நேற்று (26) இலங்கை வந்தடைந்தது.

உகண்டா மற்றும் இலங்கை அபிவிருத்தி அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகளும் எதிர்வரும் ஏப்ரல் 28, 30 மற்றும் மே 3 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இதற்கான இலங்கை அபிவிருத்தி அணிக்கு 23 வயது நிபுன் தனஞ்சய தலைவராக செயற்படவுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த தினுர களுபஹன், மல்ஷ தருபத்தி மற்றும் கருக சங்கேத் ஆகியோரும் இந்தக் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அபிவிருத்தி குழாம்: நிபுன் தனஞ்சய (தலைவர்), கிரிஷான் சஞ்சுல, ஹசித்த போயகொட, சதுன் வீரக்கொடி, மொஹமட் ஷமாஸ், ரவிந்து பெர்னாண்டோ, ரனேஷ் சில்வா, டில்ஷான் அரம்பேபொல, தினுர களுபஹன, மல்ஷ தருபத்தி, தரிந்து ரத்னாயக்க, இசித்த விஜேசுந்தர, தனல் ஹேமானந்த, கருக சங்கேத், ஷிரான் பெர்னாண்டோ.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT