Monday, May 20, 2024
Home » மண்ணரிப்பை தடுக்க ஏற்பாடு
மகாவலி கங்கையில்

மண்ணரிப்பை தடுக்க ஏற்பாடு

by Gayan Abeykoon
May 9, 2024 3:36 am 0 comment

மகாவலி கங்கையின்  இரு மருங்குகளிலும் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் பேராதனை பல்கலைக்கழக ‘சீரோ பிளாஸ்டிக்’ (பூச்சிய பிளாஸ்டிக்) எனும்  அமைப்பு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இதற்கு மகாவலி அபிவிருத்தி சபையினர் நேற்று முன்தினம்  அனுசரணை வழங்கியுள்ளனர்.   இலுப்பை மரக்கன்றுகள் உள்ளிட்டவை  இவ்வாறு நடப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  பேராதனை பல்கலைக்கழக வளாகத்தின்  மகாவலிக் கரையில் மரக்கன்றுகள் நடுகை இடம்பெற்றதுடன், இதற்கான நிகழ்வில்  பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் ட்ரன்ஸ் மதுஜித், மகாவலி அபிவிருத்தி சபையின் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவுக்கான பிரதி பணிப்பாளர் நில்மினி ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

அக்குறணை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT