Thursday, May 9, 2024
Home » செந்தில் பற்றிய வேலு குமார் எம்.பி கருத்துக்கு வீரசிங்க எம்.பி. பதிலடி

செந்தில் பற்றிய வேலு குமார் எம்.பி கருத்துக்கு வீரசிங்க எம்.பி. பதிலடி

- "கிழக்கில் இவ்வாறான ஆளுநரை நான் பார்த்ததில்லை"

by Rizwan Segu Mohideen
April 27, 2024 10:24 am 0 comment

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பற்றி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலு குமார் பாராளுமன்றத்தில் முன்வைத்த கருத்துகளுக்கு நேற்றைய தினம் (26) பாராளுமன்றத்தில் டி. வீரசிங்க எம்.பி பதிலளித்திருந்தார்.

அவர் இங்கு தெரிவிக்கையில்,

நான் வேலுக்குமாருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.செந்தில் தொண்டமான் உங்களது தமிழ் இனத்தவராக இருந்த போதிலும், இவ்வளவு காலமும் எத்தனையோ பேர் கிழக்கு மாகாணத்தில் ஆளுநர்களாக இருந்துள்ளனர். ஆனால் யாரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஆகிய மூவின மக்களுக்கும் நியாயமாக நடக்கவில்லை. செந்தில் தொண்டமான் மூவின மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றும் சிறந்த ஆளுநர்.

எங்களுடனும் பொதுமக்களுடனும் அரசு அதிகாரிகளுடனும் சிறந்த தொடர்பை ஏற்படுத்தி சிறந்த முறையில் சேவையாற்றுகின்றார்.

நீங்கள் அரசியல் குரோதங்களை மலையகத்தில் வைத்து கொள்ளுங்கள். நாட்டின் ஆளுநராக சேவை செய்யும் ஒருவரை பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி விமர்சிப்பதை நான் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடுமையாக கண்டிக்கிறேன்.

செந்தில் தொண்டமான் அவர்களின் சேவையை நாம் பாராட்ட வேண்டும் அவரை போல சிறந்த ஆளுனரை கிழக்கு மாகாணத்தில் எனக்கு நினைவுக்கு உட்பட்ட வரை நான் கண்டதில்லை என்பதை நான் வேலுக்குமாருக்கு கூற விரும்புகிறேன். உங்களுடைய அரசியலை வெளியே வைத்துக்கொள்ளுங்கள். என தெரிவித்துள்ளார்.

செந்தில் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுத்து விட்டு, அவர்களுக்கு ஒன்றும் செய்வதில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் நேற்றுமுன்தினம் (25) முன்வைத்த கருத்து தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பசுத்தோல் போர்த்திய நரி வேலுக்குமார்

கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய கட்டடம் திறப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT