Saturday, April 27, 2024
Home » தனபாக்கியம் அற நிதியத்தினால் இலவச அரிசிப்பொதிகள் வழங்கி வைப்பு

தனபாக்கியம் அற நிதியத்தினால் இலவச அரிசிப்பொதிகள் வழங்கி வைப்பு

by mahesh
March 27, 2024 3:00 pm 0 comment

புத்தளம் தில்லையடி தனபாக்கியம் அற நிதியத்தினால் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு இலவசமாக அரிசிப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு அண்மையில் தில்லையடி தனபாக்கியம் அறநிதியத்தின் பொருளாளர் பீ.எம்.ரூபனின் இல்லத்தில் அதன் ஸ்தாபக தலைவர் சுப்பையா பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

தில்லையடி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட 200 பேருக்கு இதன்போது இலவசமாக அரிசிப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் முஹம்மது தில்ஷான், தில்லையடி கிராம அலுவலர் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் அஞ்சனா, புத்தளம் பிரதேச செயலக சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர் பத்மலதா, தனபாக்கியம் அற நிதியத்தின் பொருளாளர் பீ.எம்.ரூபன் உள்ளிட்ட அதன் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT