புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் பணிப்புரையின் பேரில் புத்தளம் மரைக்கார் வீதி மீன்கடை சந்தியிலுள்ள வடிகான் புனரமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்படி சந்தியிலுள்ள வடிகானில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் பல முறைப்பாடுகள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமுக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து வடிகான் புனரமைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இவ்விடத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புத்தளம் நகரசபை செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார். இதனடிப்படையில் உரிய வேலைத்திட்டம் குறுகிய நாட்களுக்குள் நிறைவு செய்யப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களான ஏ.எச்.எம். ரிஸான், ஆசிரியர் எச்.அமீர் அலி மற்றும் எம். நிஸ்திகார் ஆகியோரும் இவ்வேலைத்திட்டத்தை களமேற்பார்வை செய்தனர்.
(புத்தளம் தினகரன் நிருபர்)