Saturday, April 27, 2024
Home » யாழில். மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

- தப்பி சென்ற சாரதி, நடத்துனர் பொலிஸ் நிலையத்தில் சரண்

by Prashahini
March 26, 2024 4:16 pm 0 comment

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி விவேகானந்தா நகரை சேர்ந்த 41 வயதான சின்னராசா சுதன்ராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பஸ், யாழ் – கண்டி நெடுஞ்சாலையில், மீசாலை வீரசிங்கம் கல்லூரி முன்பாக பாதசாரி கடவையில் பிரிதொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில், பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும், விபத்து நடைபெற்ற இடத்தில் பஸ்ஸை கைவிட்டு, அங்கிருந்து தப்பி சென்று, கொடிகாம பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்துள்ளனர்.

சரணடைந்த இருவரையும், கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT