பண்டாரகம, அட்டுலுகம நகரில் சுய வங்கிச் சேவை நிலையத்தை நிறுவியுள்ளதனூடாக, தனது 60 ஆவது வாடிக்கையாளர் அமைவிடத்தை அமானா வங்கி திறந்துள்ளது. இதனூடாக, மக்களுக்கு நட்பான அபிவிருத்தி வங்கிச் சேவைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. இல. 14, சமீஸ் மஹால் போகாவத்த, அட்டுலுகம, பண்டாரகம எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த சுய வங்கிச் சேவை நிலையத்தினூடாக, எவ்விதமான வங்கியியல் கொடுக்கல் வாங்கல்சார் முன்அனுபவத்தை கொண்டிருக்காத பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வங்கியியல் கொடுக்கல் வாங்கல்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வங்கியின் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அட்டுலுகம சுய வங்கிச் சேவை நிலையத்தை அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால், வைப்புகள் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத்துக்கான உதவி உப தலைவர் அர்ஷாத் ஜமால்தீன் மற்றும் பாணந்துறை கிளை முகாமையாளர் தில்ஷான் சுபுஹான், பிரதேசத்தின் வியாபார பிரதிநிதிகள் மற்றும் வதிவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். பண மீளப் பெறுகைகள், பண வைப்புகள் மற்றும் காசோலை வைப்புகள் போன்றவற்றை எந்நேரத்திலும் மேற்கொள்ளும் வசதியை அட்டுலுகம சுய வங்கிச் சேவை நிலையம் கொண்டிருக்கும்.
தனது வலையமைப்பு விரிவாக்கம் தொடர்பில் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “அட்டுலுகம பிரதேசத்தில் எமது சுய வங்கிச் சேவை நிலையத்தை விஸ்தரிப்பு செய்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். அதனூடாக நிதி உள்ளடகத்தை ஊக்குவிப்பதற்கான எமது அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கும் பரந்தளவு சமூகத்தாருக்கும் எமது வங்கிச் சேவைகளை சௌகரியமாக அணுகும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.