Friday, May 10, 2024
Home » அமானா வங்கியின் மேலதிக கட்டணங்களுமின்றி முன்கூட்டியே செலுத்தி தீர்க்கும் சலுகை அறிமுகம்

அமானா வங்கியின் மேலதிக கட்டணங்களுமின்றி முன்கூட்டியே செலுத்தி தீர்க்கும் சலுகை அறிமுகம்

by Rizwan Segu Mohideen
March 18, 2024 3:20 pm 0 comment

மக்களுக்கு நட்பான வங்கியியல் முறைமையை பின்பற்றும் அமானா வங்கியினால், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் விசேடமான வீட்டு நிதியளிப்பு வசதியை, முன்கூட்டியே செலுத்தித் தீர்க்கும் போது எவ்விதமான மேலதிக கட்டணங்களும் அறவிடப்படாத சலுகையுடன், மேலும் பல சலுகை வசதிகளையும் வழங்குவதாக வங்கி அறிவித்துள்ளது.

எளிமையான மற்றும் மக்களுக்கு நட்பான அனுபவத்தை உறுதி செய்யும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய சேவைகளை வழங்குவதில் தன்னை ஈடுபடுத்தியுள்ள அமானா வங்கியின் வீட்டு நிதி வசதியளிப்பினூடாக பரந்தளவு தேவைகளுக்காக நிதிவசதி வழங்கப்படுகின்றது. காணி கொள்வனவு, வீடு நிர்மாணம், பழுதுபார்ப்புகள் அல்லது விஸ்தரிப்புகளை மேற்கொள்வது, ஏற்கனவே காணப்படும் வீட்டுக் கடன் வசதியை அமானா வங்கிக்கு மாற்றுவது அல்லது கட்டிடமொன்றை அல்லது வீடொன்றை கொள்வனவு செய்த போது ஏற்பட்ட செலவை ஈடுசெய்வது போன்ற செயற்பாடுகளுக்காக இந்த வசதி வழங்கப்படுகின்றது.

பரிபூரண வீட்டு நிதியளிப்பு வசதி தொடர்பில் அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது வீட்டு நிதி வசதியளிப்பு என்பது நிதி உதவியை வழங்குவதற்கு அப்பாலானது. உங்களின் இல்ல உரிமையாளராகும் எதிர்பார்பை நனவாக்குவதற்கு வழிகோலுவதாக அமைந்துள்ளது. மக்களுக்கு நட்பான எமது தீர்வானது, நிதிசார் நெகிழ்ச்சித்தன்மையினூடாக எம் வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டும் வகையிலும், தனிநபர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு வீட்டு உரிமையாண்மையை கொண்டிருக்கும் பயணத்தை எவ்விதமான அச்சமுமின்றி மேற்கொள்ளவும், முன்கூட்டியே செலுத்தி தீர்க்கும் போது மறைமுகக் கட்டணங்கள் எதுவுமில்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

முன்கூட்டியே செலுத்தி தீர்க்கையில் எவ்விதமான கட்டணங்களும் அறவிடப்படாமை என்பதற்கு மேலதிகமாக, போட்டிகரமான தவணைக் கட்டணங்களுடன் 20 வருட காலப் பகுதி வரை நிதி வசதியை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். மூன்று நாட்களினுள் வசதிக்கான அனுமதி வழங்கப்படும். அமானா வங்கியின் வீட்டு நிதி வசதி தொடர்பான மேலதிக தகவல்களையும், அதற்கு விண்ணப்பிப்பதற்கும் வாடிக்கையாளர்கள் வங்கியின் www.amanabank.lk இணையத்தளத்தைப் பார்வையிட முடியும். அவர்களின் சில தகவல்களை உள்ளிடுவதன் மூலமாக, தமக்கு பொருத்தமான நிதித் திட்டத்தை தெரிவு செய்து கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு முடிவதுடன், சமர்ப்பித்த பின்னர் மின்னஞ்சல் வாயிலாக, உறவு பேண் முகாமையாளரின் விவரங்கள் வழங்கப்படும். அமானா வங்கியின் வீட்டு நிதி வசதி தொடர்பான விவரமான விளக்கத்தையும், சிறப்பம்சங்களையும் அறிந்து கொள்ள www.youtube.com/watch?v=U-oT9fsRd_8 எனும் வீடியோவை பார்க்கவும்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT