யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையின்றி கற்றல் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருக்க தீர்மானித்துள்ளனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் (board meeting) கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையால் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டம் தொடர்பாக நேற்றையதினம் விஞ்ஞான பீட பீடாதிபதி மற்றும் துறைத்தலைவர்களுக்கு, விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தினரால் எச்சரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தது.
அக்கடிதத்தில் நேற்று நண்பகலுக்குள் சாதகமான தீர்வு கிடைக்காது விட்டால் காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
(யாழ். விசேட நிருபர்)