Friday, May 10, 2024
Home » யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

by Gayan Abeykoon
February 23, 2024 1:00 am 0 comment

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையின்றி கற்றல் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருக்க தீர்மானித்துள்ளனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் (board meeting) கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையால் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டம் தொடர்பாக நேற்றையதினம் விஞ்ஞான பீட பீடாதிபதி மற்றும் துறைத்தலைவர்களுக்கு, விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தினரால் எச்சரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தது.

அக்கடிதத்தில் நேற்று நண்பகலுக்குள் சாதகமான தீர்வு கிடைக்காது விட்டால் காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

(யாழ். விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT