Sunday, April 28, 2024
Home » ‘மிஷ்காதுல் மஸாபீஹ்’ அறிமுக விழா நிகழ்வு

‘மிஷ்காதுல் மஸாபீஹ்’ அறிமுக விழா நிகழ்வு

மார்ச் 01, கொழும்பில்

by Gayan Abeykoon
February 23, 2024 1:00 am 0 comment

தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகத்தின் ‘ஸிஹாஹுஸ் ஸித்தா’ ஹதீஸ் கிரந்தங்களின் மிஷ்காதுல் மஸாபிஹ் தமிழ் மொழி பெயர்ப்பு தொகுதி அறிமுகமும் நூல் வெளியீட்டு விழாவும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் தமிழ் பிரிவுடன் இணைந்து ஒழுங்கு செய்துள்ள நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் ரிஸ்வி மரிக்கார் தலைமையில்  இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் பிரதம அதிதியாக பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் (நளீமி) கலந்து சிறப்பிக்க உள்ளார். இதன்போது சிறப்புரைகளை சென்னை மந்தைவெளி ஈத்கா மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா கே.எம். இல்யாஸ் ரியாஜி, புதுப்பேட்டை மஸ்ஜிதே மஹ்மூத் பள்ளியின் தலைமை இமாம் ஹாபிழ் ஏ. பீர்முகம்மது பாகவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான எம்.தமீமுன் அன்சாரி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொருளாளரும் மலேசியாவின் சயின்ஸ் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ஏ.ஏ.அஸ்வர் (அஸ்ஹரி) ஆகியோர் சிறப்புரைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT