Monday, April 29, 2024
Home » நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்த ஒரு தலைவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பது அனைவரினதும் கடமை

நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்த ஒரு தலைவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பது அனைவரினதும் கடமை

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பேட்டி

by mahesh
January 31, 2024 5:12 pm 0 comment

‘பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட ஒரு தலைவருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பது அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும்’ என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விரைவில் இறுதித் தீர்மானத்திற்கு வரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்த தலைவருடன் தொடர்ந்து செல்வதா அல்லது கட்சியில் இருந்து வேறு வேட்பாளரை முன்வைப்பதா என்பதை மொட்டுக் கட்சி எதிர்காலத்தில் தீர்மானிக்கும். அந்த முடிவின் மூலம் மொட்டு கட்சியில் உள்ள பலரும் கட்சியின் செயற்பாடுகளை அவர்களின் தனிப்பட்ட கருத்துப்படி முன்னெடுப்பதா இல்லையா என தீர்மானிப்பார்கள்” என அமைச்சர் குறிப்பிட்டார்.

மினுவாங்கொடை உள்ளூராட்சி சபைக்குட்பட்ட 2000 பாடசாலை மாணவர்களுக்கு பிரதேசசபை நிதியில் இருந்து பாடசாலைப் புத்தகங்கள் வழங்கும் வைபவத்தில் அமைச்சர் கலந்து கொண்டார். அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய கூட்டணி அமைக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், “ஹெலிகொப்டருக்கு நேர்ந்ததே, அந்த மைத்திரிக்கும் நடக்கிறது” என்று தெரிவித்தார்.

கே: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மைத்திரிபால சிறிசேனவின் குழு ஒன்றுபட்டு மீண்டும் தேர்தலுக்குச் செல்லும் என்று கூறுகிறார்கள் அல்லவா?

பதில்:- அது போன்ற கதைகள் தினமும் ஊடகங்களில் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இறுதியில் என்ன நடக்கும் என்பதை நீங்கள் பார்க்கலாம். மைத்திரிபால சிறிசேனவுடன் சென்ற ஹெலி​ெகாப்டர் கூட இன்று உடைத்து வீசப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நாம் பார்க்கலாம்.

கே: மொட்டுக் கட்சியில் சிலர் விரைவில் அங்கு கூட்டணி சேரப் போகிறது என்கிறார்களே?

பதில்:- பல்வேறு கட்சிகள், தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மொட்டு அடையாளத்துடன் இணைந்தனர். இவர்கள் அனைவரும் மொட்டு என்ற கட்சியுடன் இருக்கவில்லை. மொட்டு என்பது ஒரு கட்சி. கட்சியில் இணைந்தவர்கள் கடந்த காலத்தில் சுயேச்சையாக மாறினர். எதிர்காலத்தில் கட்சியாக மொட்டு இருக்கும். அத்தகைய குழுக்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

கே:அமைச்சரே, நீங்கள் மொட்டு கட்சியிலா? புதிய கூட்டணியிலா உள்ளீர்கள்?

பதில்:- நான் மொட்டுக்கு வேலை செய்கிறேன். எங்களிடம் எங்களது அரசியல் கருத்துகள் உள்ளன. கட்சியுடன் இணைந்து செயல்படுகிறோம்.

கே: மொட்டில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் எதிர்காலத்தில் வருவாரா?

பதில்:- கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை. எதிர்காலத்தில் கட்சி முடிவெடுக்கும். நாங்கள் இன்னும் வேட்பாளரை குறிப்பிடவில்லை. சமீபத்தில் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, ​​அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு அனைவரையும் அழைத்தோம். எல்லோரும் வேண்டாம் என்றார்கள். இந்த சவாலை எதிர்கொள்ள எவரும் முன்வரவில்லை. எல்லோரும் பின்வாங்கினர். அப்போது ரணில் விக்கிரமசிங்க அதே கட்சியால் முன்னிறுத்தப்பட்டார். இதை அவரிடம் ஒப்படைக்கக் கூறினர். அதை ஒப்படைப்பதே சிறந்தது என்று நாங்கள் நினைத்தோம். அன்று இருந்ததை விட இன்று நாடு நல்ல நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அவருடன் செல்வதா? தனித்து செல்வதா என்பதை கட்சி முடிவு செய்ய வேண்டும். அந்த நேரத்தில் மொட்டுக் கட்சி எடுக்கும் முடிவும் நமது தனிப்பட்ட கருத்தும் மாறலாம். கட்சியா? அது நமது தனிப்பட்ட கருத்தா இல்லையா என்பதை நம்முடன் இருப்பவர்கள் அந்த நேரத்தில் முடிவு செய்வார்கள்.

கே:இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள மொட்டு உறுப்பினர்கள் புதிய கூட்டணியை உருவாக்கி கூட்டங்களை நடத்தினர். நீங்கள் அதை ஆதரிக்கவில்லையா?

பதில்:- அது எமக்கு ஒரு பிரச்சினையல்ல. அதை வைத்திருப்பது நல்லது. நாட்டுக்கு சித்தாந்தம் உருவாக வேண்டும். கம்பஹாவில் ஒரு நல்ல கூட்டம் நடைபெற்றது. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஜேவிபியால் மாத்திரமே கூட்டங்களை நடத்த முடியும் என அனைவரும் நினைத்தனர். வீடுகளுக்கு தீ வைத்து, மக்களை பயமுறுத்தி, அரசியல்வாதிகளை கிராமங்களை விட்டு துரத்த முயன்றனர். ஆனால் இன்று மக்கள் வெளியே வந்து வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

கே:எதிர்வரும் தேர்தலில் ராஜபக்ஷக்கள் ஈடுபடுவார்களா?

பதில்:- அது ஒரு பிரச்சினையல்ல. ராஜபக்ஷக்கள் இன்னும் இருக்கிறார்கள். ராஜபக்ஷ செய்த நல்ல வேலையைப் பற்றி பேச வேண்டாமா? நாட்டில் போர் முடிவுக்கு வந்தது. கொவிட் தொற்றுநோயிலிருந்து மக்களைக் காப்பாற்றினர். போரில் வெற்றி பெற்ற பின்னர், நாட்டின் உள்கட்டமைப்பு கட்டமைக்கப்பட்டது. மகிந்தோதய ஆய்வு கூடப் பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. கார்பெட் வீதிகள் அமைக்கப்பட்டன. மக்களுக்கு உள்கட்டமைப்புகள் வழங்கப்பட்டன. அதைப் பற்றி பேசமாட்டீர்களா?

ஜே.வி.பி 88/89 காலத்தில் மக்களின் கழுத்து அறுக்கப்பட்டு அவர்கள் வாயில்களிலும் கம்பங்களிலும் தொங்கவிடப்பட்டனர். ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். இராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினர் வெளியில் கொல்லப்பட்டனர். பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். பிறகு எப்படி மக்கள் துணியுடன் அங்கு செல்வார்கள்? நாட்டிற்கு என்ன நடந்தது, என்ன நடக்கப் போகிறது என்பதை மக்கள் இன்று புரிந்து கொண்டுள்ளனர்.

கே: இந்நாட்டின் நிலைமையில் உண்மையில் தேர்தல் அவசியமா?

பதில்:- அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்துவது அவசியம். அதனால்தான் ஜனாதிபதித் தேர்தல் என்று பெயர் வந்தது. இது வாக்களிப்பதற்கான நேரம் அல்ல என்பதால் இதை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பலர் கூறுகின்றனர். அரசியலமைப்பு ரீதியாக அவ்வாறு செய்ய முடியாது. தேர்தல் இருந்தால் இந்நாட்டு மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நினைக்கிறோம். பொய்க் கருத்துக்களை உருவாக்குபவர்களை விட உண்மையைப் புரிந்துகொள்பவர்கள் இந்த நாட்டில் அதிகம்.

கே:தேர்தல் நடத்த திறைசேரியில் பணம் இருக்கிறதா?

பதில்:- கடந்த காலத்தை விட இப்போது நன்றாக இருக்கிறது அல்லவா? பணம் இருக்கிறதா இல்லையா என்பதை நிதி அமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும். கடந்த காலத்தில் நாம் சந்தித்த சூழ்நிலையை புரிந்து கொள்ளுங்கள். இன்று நல்ல நிலையில் இருக்கிறோம்.

கே:மக்கள் தேர்தலைக் கேட்கவில்லை. பொருட்களின் விலை, பிள்ளைகள் கல்வி கற்க பாடசாலைப் புத்தகங்கள், சீருடை ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவை இல்லாமல் தேர்தலை நடத்துவதில் அர்த்தமில்லை அல்லவா?

பதில்:- மீண்டும் சொல்வதானால், அரசியலமைப்பை யாரும் மாற்ற முடியாது. அரசியல் சாசனத்தை எரிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின்படிதான் நாடு நிர்வகிக்கப்படுகிறது. தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் அதற்குச் செல்கிறோம்.

கே:எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டைக் கட்டியெழுப்ப நாட்டை அபிவிருத்தி செய்ய அதிகாரம் கேட்கிறாரே!

பதில்:- நாங்கள் கொடுத்தபோதும் அவர் பெற்றுக் கொள்ளவில்லையே!

கே: அவர்கள் இதைச் செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்:- முடியாது.அவர்கள் தங்களால் செய்ய முடியாது என்று பயந்தார்கள். அதைச் செய்யக் கூடியவர் பொறுப்பேற்றார். இப்போது அது வேலை செய்கிறது.

கே:உங்கள் முழுவின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும்?

பதில்: எதிர்காலத்தில் வேட்பாளர்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

கே:பல ஜனாதிபதிகள் தேர்தலில் குதிக்க இருக்கிறார்கள். அது வாக்குகளைப் பிரித்துவிடும் அல்லவா?

பதில்:- நீங்கள் குறிப்பிடும் குழுவில் எனது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்துள்ளேன். நான் இப்போது நாட்டைப் பற்றிச் சிந்திக்கிறேன். கட்சியை விட நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ள ஒரு தலைவருக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறேன்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT