137
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி மாவட்டங்களில் பல்வேறு பிரதேசங்களிலும் இவ்வாறு காற்றின் தரம் குறைவடைந்துள்ளமை தெரியவருவதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுவாசிப்பதில் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் நோயாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களைக் கொண்ட நோயாளர்களும் மிகவும் கவனமாக செயற்பட வேண்டுமென, அவர் கேட்டுள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)