Friday, May 10, 2024
Home » கொழும்பு, யாழ்ப்பாணம் பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைவு

கொழும்பு, யாழ்ப்பாணம் பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைவு

சுவாச நோய் தொடர்பானவர்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும்

by mahesh
January 17, 2024 7:20 am 0 comment

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி மாவட்டங்களில் பல்வேறு பிரதேசங்களிலும் இவ்வாறு காற்றின் தரம் குறைவடைந்துள்ளமை தெரியவருவதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுவாசிப்பதில் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் நோயாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களைக் கொண்ட நோயாளர்களும் மிகவும் கவனமாக செயற்பட வேண்டுமென, அவர் கேட்டுள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT