Monday, May 20, 2024
Home » கோறளைப்பற்றில் விசேட கூட்டம்

கோறளைப்பற்றில் விசேட கூட்டம்

by Gayan Abeykoon
May 10, 2024 8:46 am 0 comment

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில்  வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் பங்குபற்றுதலுடன் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் அண்மையில் இந்தக் கூட்டம் நடைபெற்றதுடன், இதில்  கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்களான எம்.ஏ.ரியாஸ், எம்.எம்.றுவைத், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீன், கல்குடா இணைப்பாளர் எம்.ஜவாத்,  விவசாய அமைப்பினர், அரச அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சூழலுக்கு பாதகம் விளைவிக்கும் மர ஆலைகள், அரிசி ஆலைகள் என்பவை தொடர்பாக இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கவனம் செலுத்தினர்.

இந்நிலையில் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எதிர்காலத்தில் இது தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளது.
(எம்.எம்.ஜெஸ்மின்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT