சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனமாக விளங்கும் Toastmasters International நிறுவனம் இந்த வருடத்தில் அதன் ஞாபகார்த்த நூற்றாண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடுகின்றது. வெலிசர Wave N’ Lake மாநாட்டு மண்டபத்தில் இன்று 10 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதிவரை மூன்று தினங்கள் இதன் நூற்றாண்டுவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
தகவல் தொடர்பு மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கான சேவை வழங்கி வரும் நோக்கில் Toastmasters International நிறுவனம் விளங்குகின்றது.
இம்மாநாட்டில் பிரதம விருந்தினராக ஐக்கிய அமெரிக்காவின் Toastmasters International தலைவர் Morag Mathieson கலந்துகொண்டு விசேட உரை நிகழ்த்துகிறார். இதனைத் தொடர்ந்து சொற்பொழிவாளர்களின் விசேட உரைகளும் இம்மாநாட்டில் இடம்பெறுகின்றன.
பேராசிரியர் ஏ.கே.டபிள்யூ. ஜயவர்தன, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரமேஷ் ஷப்டர், முகாமைத்துவப் பணிப்பாளர் பால்ராஜ் அருணாசலம் ஆகியோரின் உரைகளும் மாநாட்டில் இடம்பெறவுள்ளன.
இலங்கை, மாலைதீவுகள், பிரித்தானியா, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த நாவன்மையாளர்கள் (Toastmasters), இந்த பெருமைமிக்க நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.