Monday, May 20, 2024
Home » சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 232 வீதமாக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 232 வீதமாக அதிகரிப்பு

நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய வேண்டுகோள்

by mahesh
January 17, 2024 7:30 am 0 comment

சிறைச்சாலைகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் நோயாளர்களாகும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவ செயலணி தெரிவித்துள்ளது. நூற்றுக்கு 232 வீத அதிகரிப்பு காணப்படுவதாகவும் இதனால், வருடமொன்றிற்கு 800

கோடிக்கும் அதிகமான நிதியை அரசாங்கம் செலவிட நேர்ந்துள்ளதாகவும் அச்செயலணி தெரிவித்துள்ளது. 27 சிறைச்சாலைகளில் 187 மலசலகூடங்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது உபயோகத்திலுள்ள மலசலகூடங்களில் 287 மலசல கூடங்கள் திருத்தப்படவேண்டிய நிலையில் காணப்படுவதாகவும் அச்செயலணி தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், பிணை நிபந்தனைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் பெருமளவிலான சிறைக்கைதிகள் சிறைச்சாலையில் உள்ளனர்.சுமார் 1795 கைதிகள் இவ்வாறு உள்ளதாக செயலணி அறிவித்துள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT