ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராக இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஆர்.திரவியராஜ் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை அவர் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
நேற்றுக் காலை பிரதேச செயலகத்துக்கு வருகை தந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகா கணபதி ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் அவர் மரக்கன்றொன்றையும் நாட்டி வைத்துள்ளார். இதன்போது புதிய பிரதேச செயலாளருக்கு அனைவரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகவும் ஆர்.திரவியராஜ் கடமையாற்றியிருந்தார். அத்துடன் வெல்லாவெளி, நிந்தவூர், அம்பாறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றியதுடன், பொத்துவில் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
வாச்சிக்குடா விசேட நிருபர்