Friday, May 10, 2024
Home » 10.5 கி.கி. ஹெரோயினுடன் மூவர் கைது

10.5 கி.கி. ஹெரோயினுடன் மூவர் கைது

- பெறுமதி சுமார் ரூ.27 கோடி என மதிப்பீடு

by Prashahini
November 22, 2023 10:23 am 0 comment

இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் நேற்று (21) மாலை 10.5 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

27 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 3 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இந்த ஹெரோயின் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அது கவனமாக 8 பொதிகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் சுங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஹெரோயின் நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தில் இயங்கி வரும் இறக்குமதி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பொருட்களை விடுவிப்பதற்காக வந்த நபர் மற்றும் 2 முகவர்களை சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT