தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்துக்குட்பட்ட ஏறாவூர் கோட்டத்தில் 76 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
அதன்படி ஆகக் கூடுதலாக அல்முனீறா மகளிர் மகா வித்தியாலயத்தில் 15 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதோடு அடுத்ததாக அறபா வித்தியாலயத்தில் 14 மாணவர்களும் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் 13 மாணவர்களும் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 12 மாணவர்களும் பசீர் சேகுதாவூத் வித்தியாலயத்தில் 07 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
அத்தோடு மிச்நகர் இல்மா வித்தியாலயத்தில் 05 மாணவர்களும் டாக்டர் பதியூதீன் மஹ்மூத் வித்தியாலயத்தில் 05 மாணவர்களும் டாக்டர் அகமட் பரீட் வித்தியாலயத்தில் 04 மாணவர்களும் றூகம் அல் அமான் வித்தியாலயத்தில் 01 மாணவனுமாக மொத்தமாக 76 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
அல்முனீறா மகளிர் மகா வித்தியாலயத்தில் சித்தியடைந்த மாணவர்களை படத்தில் காணலாம்.
ஏறாவூர் சுழற்சி நிருபர்