நெஸ்லே நெஸ்டமோல்ட் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நடத்தும் அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (11) காலியில் நடைபெறவுள்ளது.
இதில் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவம் செய்து 300க்கும் அதிகமானவர்கள் அரை மரதன் (21 கி.மீ.) போட்டியில் பங்கேற்கவிருப்பதோடு கண்காட்சி மரதன் போட்டியில் 900 பேர் கலந்துகொள்ளவுள்ளனர். அரை மரதன் போட்டி காலை 6.30 க்கு காலி பஸ் தரிப்பிடத்தில் ஆரம்பமாகி தல்பே கடற்கரை பஸ் தரிப்பிடம் வரை சென்று அங்கிருந்து அந்தப் பாதை ஊடாக காலி சர்வதேச விளையாட்டு அரங்கில் நிறைவடையவுள்ளது. 5 கி.மீ. கொண்ட கண்காட்சி மரதன் போட்டி காலி பஸ் தரிப்பிடத்தில் ஆரம்பித்து காலி சர்வதேச விளையாட்டரங்கு வரை நடைபெறவுள்ளது.