Friday, May 10, 2024
Home » ரயில் சாரதிகள் பணிப்புறக்கணிப்பால் 11 ரயில் சேவைகள் இரத்து

ரயில் சாரதிகள் பணிப்புறக்கணிப்பால் 11 ரயில் சேவைகள் இரத்து

by Prashahini
July 24, 2023 9:33 am 0 comment

புகையிரத சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று (24) காலை சேவையில் ஈடுபடவிருந்த 11 ரயில் சேவைகள் இரத்தாகியுள்ளன.

ரயில் சாரதிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் பிரச்சனையை முன்னிறுத்தி ரயில் சாரதிகளால் இவ்வாறு தொழில்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஏனைய ரயில் சேவைகள் தாமதமாகும் சாத்தியம் உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரம்புக்கனைக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெயங்கொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் குறித்த ரயில் இடை நிறுத்தப்பட்டுள்ளதால் பிரதான ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரயில் சாரதிகள் பணிப்புறக்கணிப்பால் நேற்று (23) மாலை 6.40 மணிமுதல் இரவு 09 மணிவரையான காலப் பகுதிக்குள் மாத்திரம் 12 பயணிகள் புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்ததாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT