Monday, May 20, 2024
Home » இலங்கை அணிக்கு மேலும் களத்தடுப்பு பயிற்சியாளர்

இலங்கை அணிக்கு மேலும் களத்தடுப்பு பயிற்சியாளர்

by sachintha
July 24, 2023 9:13 am 0 comment

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையின் களத்தடுப்பு மோசமாக இருந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேலதிக களத்தடுப்பு பயிற்சியாளர் ஒருவர் அணியுடன் இணைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி கடந்த வெள்ளிக்கிழமை (21) அன்டன் ரவுக்ஸ் அணியுடன் இணைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி அவர் மனோஜ் அபேவிக்ரமவுடன் இணைந்து மேலதிக களத்தடுப்பு பயிற்சியாளராக செயற்பட்டு வருகிறார். தேசிய அணி வீரர்களுடன், குறிப்பாக உயர் திறமை மையத்தில் பணியாற்றுவதற்காகவே ரவுக்ஸ் கடந்த மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் சபையால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தென்னாபிரிக்காவில் முதல்தர கிரிக்கெட்டில் ஆடி இருக்கும் ரவுக்ஸ் நெதர்லாந்து அணியின் பயிற்சியாளராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT