Friday, May 10, 2024
Home » பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெரோம் பெனாண்டோவின் பயணத்தடை நீக்கம்

பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெரோம் பெனாண்டோவின் பயணத்தடை நீக்கம்

by Gayan Abeykoon
April 4, 2024 8:14 am 0 comment

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதையடுத்து அவருக்கான வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் போதனைகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 03 நாடுகளில் நடைபெறவுள்ள மத வழிபாடுகளில் பங்கேற்பதற்கு கோட்டை மஜிஸ்திரேட் நீதவான் திலின கமகே அனுமதி வழங்கியுள்ளார்.

போதகர் ஜெரோம் பெனாண்டோ சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT