Monday, May 20, 2024
Home » ‘மாறுதல்கள்’ நூல் வெளியீட்டு விழா
தெளிவத்தை ஜோசப்பின்

‘மாறுதல்கள்’ நூல் வெளியீட்டு விழா

by Gayan Abeykoon
April 4, 2024 8:35 am 0 comment

‘கனடா தாய் வீடு’ இதழில் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘மாறுதல்கள்’ எனும் நெடுங்கதை நூல் வெளியீட்டு விழா இம்மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07)  மாலை 4.00 மணிக்கு இந்நூல் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வுக்கு சாகித்யரத்ன தி. ஞானசேகரன் தலைமை தாங்கவுள்ளதுடன், நிகழ்வை மல்லியப்பூசந்தி திலகர் தொகுத்து வழங்கவுள்ளார். நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

வரவேற்புரையை கே. பொன்னுத்துரையும் வெளியீட்டுரையை சுப்பையா கமலதாசனும் நயவுரையை வசந்தி தயாபரனும் கருத்துரையை கவிஞர் அல் அஸுமத்தும் ஏற்புரையை தெளிவத்தை ஜோசப் குடும்பத்தினரும் நிகழ்த்தவுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT