Monday, May 20, 2024
Home » புத்தளம் முன்னாள் காதி நீதவானுக்கு 17வரை விளக்கமறியல் நீடிப்பு

புத்தளம் முன்னாள் காதி நீதவானுக்கு 17வரை விளக்கமறியல் நீடிப்பு

by Gayan Abeykoon
May 10, 2024 9:47 am 0 comment

புத்தளம் முன்னாள் காதி நீதிபதியை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவில் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சந்தேக நபர் சார்பில் பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எனினும், குறித்த பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, புத்தளம் பதில் காதி நீதிமன்ற நீதிபதியாக நீர்கொழும்பு காதி நீதிமன்ற நீதிபதி அஷ்ஷெய்க் எம்.எம்.முஹாஜிரீன் (இஹ்ஸானி) நியமிக்கப்பட்டுள்ளார்.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT