141
சுமார் 02 கோடி ரூபாவுக்கும் அதிகமான “குஷ்” போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின்
அதிகாரிகளால் இந்நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார். அவரது பயணப் பொதியில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கிலோ 278 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றினர். ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது டைய இச்சந்தேக நபர் நடனக் கலைஞர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.