88
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பொலிஸார் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது புலோலி, சாரையடிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர் ஒருவர் நிற்பதை அவதானித்து அவரை சோதனையிட்ட போது அவரது உடமையில் 2100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. இதனையடுத்து 20 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(நாகர்கோவில் விசேட. கரவெட்டி தினகரன் நிருபர்கள்)