Monday, May 20, 2024
Home » வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்

வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்

by Gayan Abeykoon
May 10, 2024 6:33 am 0 comment

வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்றையதினம் வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது.

வேம்படிச் சந்தியிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலை வீதியூடாக காங்கேசந்துறை வீதி ,சத்திரச்சந்தி வரை வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது.

வீதியில் காணப்படும் ஆபத்து நிறைந்த  இடங்களை அடையாளம் காணல், வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகன நடைமுறைகளைப் பின்பற்றல், பரிசோதனை போன்ற செயற்பாடுகள் நடைபெற்றன.

இச்செயற்பாட்டை தொடர்ச்சியாக ஏனைய பகுதிகளில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர், வடக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர், மோட்டார் வாகன பரீட்சகர்கள், அதிகாரிகள், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், போக்குவரத்து பொலிஸார், வைத்தியர்கள், மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

(யாழ். விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT