62
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டனர். யாழ் – கண்டி நெடுஞ்சாலை மற்றும் யாழ் – மன்னார் நெடுஞ்சாலை ஆகியன சந்திக்கும், நாவற்குழி பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வீதிகளில் பயணிக்கும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை மறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
(யாழ். விசேட, சாவகச்சேரி நிருபர்கள்)