மக்கள் சக்தி ‘சக்தி TV இன் மற்றுமொரு மாபெரும் படைப்பாக இலங்கை வாழ் இளம் கலைஞர்களை உலகறியச் செய்யும் முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட இசை reality நிகழ்ச்சி நாளை 30ஆம் திகதி அறிமுகமாகிறது ‘Shakthi Crown.’
இலங்கையின் முதற்தர தமிழ் தொலைக்காட்சியாக விளங்கும் சக்தி ரி.வி கடந்த காலத்தில் மக்களை மகிழ்விக்கவும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் பல புதுமையான நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட்டுள்ளது. எப்போதும் சக்தி ரி.வி தயாரிக்கும் நிகழ்வுகள் நம்நாட்டு இளைஞர்கள் , யுவதிகள், மாணவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்காட்டி அவர்களை புதிய வழியில் இட்டுச் செல்வதாகவே அமைந்துள்ளது. கடந்த 25 வருடங்களில் சக்தி ரி.வி உருவாக்கிய நிகழ்வுகளும், சக்தி வாய்ப்பளித்த கலைஞர்களும், என்றும் மக்கள் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். Shakthi Crown எனப்படும் இந்த புதிய முயற்சி நம் நாட்டில் பாடும் திறமைகளை வெளிக்கொணர்வதற்காக வித்தியாசமாகவும் சர்வதேச தரத்திலும் உருவாக்கப்படும் ஒரு reality நிகழ்ச்சியாகும். 43 அத்தியாயங்கள் கொண்ட இந்த நிகழ்ச்சி நாளை 30 ஆம்ஆம் திகதி முதல் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 8.30மணிக்கு சக்தியை அலங்கரிக்கவுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் ஒரு நிகழ்ச்சியின் நோக்கமும் அதன் உள்ளடக்கமும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்த நிகழ்ச்சியின் உருவாக்கமும் இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த அழகிய நிகழ்வை Capital Maharaja குழமத்தின் ஒரு அங்கமாகவும் Stein கலையகம் உருவாக்கவுள்ளது.
சக்தி ரி.வியின் 25 வருட அனுபவமும் Stein கலையகத்தின் உலக தரமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை மிகச்சிறந்த முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. Shakthi Crown தமிழ் இசைத்துறையின் இந்த புதிய அனுபவத்தை பெற்றுக்கொள்ள நாளை 30ஆம் திகதி முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8.30 மணிக்கு சக்தி ரி.வியுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.