Sunday, April 28, 2024
Home » மட்டக்களப்பில் கோரவிபத்து 16 வயது மாணவன் ஸ்தலத்தில் பலி

மட்டக்களப்பில் கோரவிபத்து 16 வயது மாணவன் ஸ்தலத்தில் பலி

by Gayan Abeykoon
March 29, 2024 10:30 am 0 comment

மட்டக்களப்பு, பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில், 16 வயது மாணவன் ஸ்தலத்தில் உயிரிழந்தார். இவர், இம்முறை சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்தவராவார். உடன் பயணித்த மற்றொருவர் படுகாயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்விபத்து 27ஆம் திகதி இடம்பெற்றது. பெரியகல்லாறு மயான வீதியில்

இரு மாணவர்களும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நிலையில், வேகத்தை கட்டுப்படுத்த முடியாது மின்சாரத் தூணில் மோதி விபத்து நேர்ந்தது.இதில்,பெரியகல்லாறு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த சந்திரகாந்தன் சதுஸன் ஸ்தலத்திலே உயிரிழந்தார்.

மேலும் ஒரு மாணவர் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான இரண்டு மாணவர்களும் இம்முறை சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT