Monday, May 6, 2024
Home » சம்மாந்துறை மீடியா போரம் உதயம்

சம்மாந்துறை மீடியா போரம் உதயம்

by Gayan Abeykoon
April 24, 2024 8:13 am 0 comment

ம்மாந்துறை பிரதேசத்திலுள்ள அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்களில் கடமையாற்றும் ஊடகவியாளர்கள், பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் ஏனைய ஊடகவியலாளர்களின் நலன் கருதி ‘சம்மாந்துறை மீடியா போரம்’ எனும் அமைப்பு உதயமாகியுள்ளது. 

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு சம்மாந்துறையில் இடம்பெற்றது. மூத்த ஊடகவியலாளர் மன்சூர் ஏ. காதிர் மற்றும் சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் மனித இர்ஷாட் ஏ காதர், சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.புவாத் ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் போசகர்களாக மூத்த ஊடகவியலாளரும், எழுத்தாளருமான மாறன் யூ செயின், ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் யூ.எல். அலியார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உத்தியோகபூர்வமான நிர்வாக சபையும் சபையோரின் ஏகோபித்த பிரகாரம் அங்கீகரிக்கப்பட்டது.

தலைவராக எம்.ஐ.பீ. பௌஸ்தீன், உபதலைவர்களாக கலாநிதி எஸ்.எல். றியாஸ், எம்.ஐ.எம்.ஜலீல், பொதுச்செயலாளராக ஏ.ஜே.எம். ஹனீபா, உபசெயலாளராக நௌஷாட் ஏ. கரீம், நிர்வாகச் செயலாளராக எம்.எச்.எம்.ஹாரீஸ், இணைப்புச் செயலாளராக கியாஸ் ஏ. புஹாரி, பொருளாளராக யூ.எல்.எம். றியாஸ், நிர்வாக சபை உறுப்பினர்களாக எம்.எல். இஸ்ஹாக், எஸ்.எம்.எம். ஜவாத், எம்.சி. அன்சார், எம்.ஐ.எம். சாக்கீர், ஏ.ஜீ.எம். பிரோஸ், சீ.எம்.எம். தாரீக் முஹம்மட், மிஸ்பாஉல் ஹக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இப்பிரதேசத்தில் வளர்ந்து வரும் ஊடக ஆவலர்களுக்கு எதிர்காலத்தில் பல்வேறு ஊடக பயிற்றுவிப்புக்கள் மற்றும் ஊக்கப்படுத்தல்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர்.

ஊடகத்துறைசார் செயற்பாட்டார்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், ஓய்வுநிலை ஊடகவியலாளர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை இங்கு தெரிவித்தனர்.

எம்.சி. அன்சார்…

(சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்)

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT