Sunday, May 19, 2024
Home » நாட்டின் சில இடங்களில் பிற்பகலில் ஆங்காங்கே மழை

நாட்டின் சில இடங்களில் பிற்பகலில் ஆங்காங்கே மழை

- சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை

by Rizwan Segu Mohideen
May 6, 2024 8:03 am 0 comment

– கரையோரப் பகுதிகளிலும் சில இடங்களில் மழை

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, எதிர்வரும் சில நாட்களுக்கு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிக உஷ்ணமான நிலை காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Weather-Forecast-May-05-2024

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT