பாராளுமன்ற கட்டடத்தில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை கள், விரைவில் மேற்கொள்ளப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டடத்தின் சில பகுதிகள் திருத்தப்பட வேண்டியுள்ளன. இதனை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற கட்டிடமானது 40 வருடங்கள் பழைமை வாய்ந்தது. இது சேதைமடைந்தமை தொடர்பில் புதிதாக தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. பாராளுமன்ற செயலணியின் ஆலோசனைக் குழுவில் நிதியமைச்சின் பிரதிநிதியாக தாம், அங்கம் வகிப்பதாகவும் இந்த வகையிலேயே இது தொடர்பில் தாம், கவனம் செலுத்தியுள்ளதாகவும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்