முறையாக விடுமுறை பெறாது கடமைக்கு சமுகமளிக்காதுள்ள 9,000க்கு மேற்பட்ட இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்புக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இக்கால அவகாசம் மே, மாதம் (20) வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராணுவ தலைமையகம் தெரிவிக்கையில்: முறையாக விடுமுறை பெற்றுக் கொள்ளாமல் கடமைக்கு சமுகமளிக் காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதே வேளை ஏப்ரல் 20 முதல், முறையாக விடுமுறை பெறாமல் கடமைக்கு வராதுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் ஏனைய பதவியினருக்கும் பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொது மன்னிப்புக் காலம் மே மாதம் 20 ஆம் திகதி வரை நடைமுறையில் உள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலத்தில் இதுவரை 9,770 இராணுவத்தினர் சேவையிலிருந்து விலகியுள்ளதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும், 9,735 இராணுவ வீரர்கள் தாம், சேவையில் ஈடுபட்டுள்ள தமது ரெஜிமென்ட் மையங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும்
அதுமட்டுமன்றி முறையாக விடுமுறை பெற்றுக் கொள்ளாமல் மற்றும் கடமைக்கு சமுகமளிக்காமல் வெளிநாட்டில் இருக்கும் 35 இராணுவ வீரர்களும் இராணுவ சேவையிலி ருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ள தாகவும் இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்