பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காதென, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் (04) நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுபற்றித் தெரிவித்த அமைச்சர்: தமிழ் பொது வேட்பாளர் குறித்து சில தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் கருத்துக்களை முன்வைக்கி ன்றனர்.இதில் எவ்வித யதார்த்தமும் இல்லை.
இதை நியாயமானதாக நான்,நோக்கவும் இல்லை.தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக்கூறியோர் கடந்த காலங்களில், தங்களது சுயலாபங்களுக்காக தீராத பிரச்சினைகளை உருவாக்கி வந்தனர். தமிழ் சமூகத்துக்கு ஏற்ற நடைமுறைக்குச் சாத்தியமான யதார்த்த முடிவுகளை எடுக்க வேண்டும்.தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம், அரசியல் உள்நோக்கம் கொண்ட சுயலாபமிக்க சிந்தனையாகும். முக்கிய மூன்று வேட்பாளர்களுடன் எமது மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடி, அதன் பின்பு உத்தரவாதத்தை பெற முயற்சிகக் வேண்டும். பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால், பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமிருந்திருக் காது.