Thursday, May 9, 2024
Home » அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள்

by mahesh
March 27, 2024 8:00 am 0 comment

மூலோபாய முக்கியத்துவம் கொண்ட இரண்டாம்நிலை வணிகம்

மென்பொருள் தரவு விஞ்ஞானம், படைப்பாக்கம் மற்றும் வன்பொருள் விடயஞ்சார் துறைகளில் தொழிநுட்ப ரீதியான தீர்வுகளை வழங்குகின்ற நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள கம்பனி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மூலம் அங்கீகாரம் பெற்றதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இக் கம்பனி மூலோபாய முக்கியத்துவம் கொண்ட இரண்டாம் நிலை வணிகமாகப் பெயரிடுவதற்காக விண்ணப்பித்துள்ளது. கம்பனி, 5,00,000 அமெரிக்க டொலர்களை ஆரம்ப முதலீடாகவும், 05 வருடங்களாகும் போது அண்ணளவாக 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டுவதற்கும், குறித்த காலப்பகுதியில் கிட்டத்தட்ட 400 வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், 2023 ஆண்டின் 02 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (மூலோபாய முக்கியத்துவம் கொண்ட வணிகத்திற்கு விடுவித்தல் அல்லது ஊக்குவிப்பு அளிப்புக்கள் தொடர்பான வழிகாட்டல்) ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளுக்கமைய குறித்த கம்பனியை விடுவித்தல் அல்லது ஊக்குவித்தல் கையளிப்புக்கான தகைமைகளைக் கொண்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, விடுவிப்பதற்கும் அல்லது ஊக்குவிப்பு கையளிப்புக்கும், அதற்கான விதியை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை கொடியின் கீழ் கப்பல்கள் பதிவு

கப்பல் பதிவுகளை மேற்கொள்வது, உள்நாட்டுப் பொருளாதாரத்துக்கு அதிகளவில் வெளிநாட்டு செலாவணி கிடைக்கின்ற முக்கிய வழியாக அமைவதுடன்,நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புக்கள் பலவற்றை உருவாக்குவதற்குமான ஆற்றல் வளம் காணப்படுகின்றது. இலங்கைக் கொடியின் கீழ் கப்பல்களைப் பதிவு செய்வதை ஊக்குவிப்பதற்காக தகைமை கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரல்களைப் பெறுவதற்கும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவின் மூலம் முன்மொழிவை மதிப்பீடு செய்து பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் மிகவும் பொருத்தமான நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்கும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொரிய தேசிய தொழிற்பயிற்சி நிறுவன பயிற்சிப் பாடநெறி

ஒறுகொடவத்த இலங்கை – கொரிய தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கியால் வழங்கப்பட்ட 2,900 மில்லியன் ரூபா உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இந்நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் பாடநெறிகள் மற்றும் நிறுவனத்தில் காணப்படும் வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியளிப்பை வழங்குவதற்கு கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

மேலும், 16 மாதகாலம் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இக் கருத்திட்டத்தின் கீழ், மோட்டார் வாகன தொழிநுட்பம், உற்பத்தித் தொழிநுட்பம் உருக்கு ஒட்டுத் தொழிநுட்பம், மின்னியல் தொழிநுட்பம், இலத்திரனியல் தொழிநுட்பம், தானியக்கவியல் மற்றும் றொபோ தொழிநுட்பம், திரவ அமுக்க தொழிநுட்பம், மெகாரொனிக் தொழிநுட்பம் உள்ளிட்ட அனைத்து பாடநெறிகளிலும் பொதுத் தேவைகளுக்காக வசதிகளை வழங்குவதே நோக்கமாக அமைகின்றது.

முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இருதரப்பினர்களுக்கிடையே கையொப்பமிடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும், வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உடன்பாடு கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நெடுஞ்சாலைகள் சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்திடம் ஒப்படைப்பு

நெடுஞ்சாலைகள் வலைப்பின்னல், நெடுஞ்சாலைகளுக்குச் சொந்தமான காணிகள், நெடுஞ்சாலைகளுக்கான கடன்கள் (உள்நாட்டு) மற்றும் ஏற்புடைய பணிக்குழாமினரை மிகவும் வணிக ரீதியாக முகாமைத்துவம் செய்வதற்கு இயலுமாகும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிலிருந்து வேறாக்கி சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் இற்கு வழங்குவதற்காக அமைச்சரவைக் கூட்டத்திலும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நெடுஞ்சாலைகளின் நாளாந்த நடவடிக்கைகள் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் 2024.04.01 தொடக்கம் முறைசார்ந்த முகாமைத்துவ ஒப்பந்தத்தின் கீழ் சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் இற்கு ஒப்படைப்பதற்கும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் கூட்டாக மேற்கொள்கின்ற சட்டம் மற்றும் நிதி ரீதியான சாத்தியவளக் கற்கையின் பின்னர் குறித்த அனைத்துச் சொத்துக்களும் 06 மாதகாலத்தில் சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் டிற்கு ஒப்படைப்பதற்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் மிளகு உற்பத்தி சர்வதேச மாநாடு

உலகில் மிளகு உற்பத்தி செய்கின்ற பிரதான நாடுகள் இணைந்து 1972 ஆம் ஆண்டில் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் கீழ் சர்வதேச மிளகு உற்பத்தி சமூகங்கள் எனும் பெயரில் சர்வதேச அமைப்பொன்று தாபிக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் பிரதான நிரந்தர உறுப்பு நாடுகளாக இலங்கை, இந்தியா, இந்தோனீசியா, மலேசியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் செயற்படுகின்றன.

சர்வதேச வர்த்தகத்தில் இறக்குமதி வரி மற்றும் இறக்குமதி வரி அல்லாத தடைகளை தளர்த்துவதற்காக ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளல் போன்ற விடயங்கள் பற்றிய உடன்பாடுகளை எட்டும் நோக்கில் சர்வதேச மிளகு உற்பத்தி சமூகத்தின் 52 ஆவது சர்வதேச மாநாட்டை இவ்வாண்டு இலங்கையில் நடாத்துவதற்காக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலைய கருத்திட்டம்

பதினொரு (11) மின் கட்டமைப்பு உபநிலையங்களில் 01 MW – 05 MW – AC கொள்ளவு கொண்ட 70 MW கொள்ளவை நிறுவுவதற்காக சூரிய சக்தி வோலிரியாதா மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் கருத்திட்டத்தின் கிழ் 20 வருடகால நடவடிக்கை காலப்பகுதியுடன் கூடிய நிர்மாணித்தல், உரித்துக் கொள்ளல் மற்றும் அமுல்படுத்தல் அடிப்படையில் நிர்மாணிப்பதற்காக 05 மின்கட்டமைப்பு உபநிலையங்களில் 51ஆறு விநியோத்திற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்காக 2023.10.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்புடைய முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக கட்டளையொன்றை சமர்ப்பித்தல்

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் தீர்வை வரியை தளர்த்தும் வேலைத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்காக 2023.05.29 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இக் கட்டளையை பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தல்

210 இயைபு முறைக் குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தல்களுக்கான 64 பொருட்களை இறக்குமதி செய்யும் போது வசதியளிப்பதற்காக தனிக்கூட்டு வரி அறவீட்டுக்காக 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் விசேட வியாபாரப் பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வரி அறவீட்டை நடைமுறைப்படுத்தும் போது எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளால் இவ்வரி அறவீட்டுச் சட்டத்தை இடைநிறுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டத்தை இடைநிறுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT