இலங்கையில் உள்ள இந்திய கலாசார சங்கம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் இணைந்து ஒழுங்கு செய்த முழுநாள் கிரிக்கட் போட்டி, கலாசார நிகழ்வுகள் கொழும்பு, பார்க் வீதியிலுள்ள கோல்ட் மைதானத்தில் (05) இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் சா தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டியில் 10க்கும் மேற்பட்ட இந்திய கழகங்கள் கலந்துகொண்டதோடு இறுதிப்போட்டிக்கு வெற்றி பெற்ற அணியுடன் இலங்கையின் 96ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியும் மோதியது.
இப்போட்டியில் அர்ஜுன ரனதுங்க மற்றும் அரவிந்த டி சில்வா, உபதலைவர், ருவான் சொய்சா, உபுல் சந்தன, ரவிந்திர புஸ்பக்குமார ஆகியோர்கள் கொண்ட அணி 110/1 என்ற ஓட்டத்தினைப் பெற்று வெற்றியீட்டியது. வெற்றிக்கிண்ணம் இந்திய உயர் ஸ்தானிகரால் அர்ஜுன ரனதுங்கவிடம் கையளிக்கப்பட்டது.
(அஷ்ரப் ஏ சமத்)